ஏங்கல்ஸ் 'அடிமைப்படுத்தலின் மூன்று முக்கியமான வடிவங்கள்' இன்னும் விரிவான நூலுக்கு முன்னுரை எழுதினார் பின் அந்த புத்தகத்தை எழுத முடியாமல் போனதால் 'மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்' என்ற பெயரில் கட்டுரையாக பிரசுரிக்கப்பட்டது. மனிதக் குரங்கிலிருந்து மனிதன் எப்படி வெளியேறினான் அதற்கு உணவு பழக்க வழக்கம்,இயற்கை சூழ்நிலைகள் எல்லாம் எவ்வாறு உதவி செய்தன அதன்பின் கைகள் உழைப்பின் உறுப்பாக மாறிய காலகட்டம் அதனைத் தொடர்ந்து சுயமாக சிந்தித்து மனிதன் பேச ஆரம்பிகக்கும் நிகழ்வு. கைகளும் பேச்சும் மனித வாழ்க்கையின் பரிமாண வளர்ச்சியில் மிக முக்கிய மாற்றங்களை எவ்வாறு உருவாக்கின. மிருகங்கள் திட்டமிடாமல் சில இயற்கையில் அழிவைச் செய்கின்றன. மனதின் திட்டமிட்டு பல்வேறு இயற்கை மூலங்களை மாற்றியமைக்கிறான்,அழிக்கிறான். ஆரம்பத்தில் இது வெற்றிகரமான யுத்தியாக தெரிந்தாலும் உடனடி மற்றும் நாள் பட்டவிளைவுகள் எதிர்மறையாய் அமைகின்றன. உபரிநிலம் அற்றுபோகும் போதும் நிலம் தனி...