Posts

Showing posts from June, 2022

மீன்கள் உறங்கும் குளம்

புத்தகம்:மீன்கள் உறங்கும் குளம்  ஆசிரியர்: பிருந்தா சாரதி  மீன்கள் உறங்கும் குளம்  விண்மீன்களை ரசித்தபடி  தூண்டில் காரன் **** தண்ணீர் லாரி தளும்புகிறது  பாலத்தின் கீழே  வறண்ட ஆறு ****  புள்ளி வைத்து முடிப்பதற்குள்  கலைத்து விடுகிறது காற்று  வெப்பம் பூக்கோலம் மூன்று வரி கவிதைகள் அடங்கிய சிறிய புத்தகம் பக்கங்கள் :126 விலை:100 பதிப்பு:டிஸ்கவரி புக் பேலஸ்

குழந்தை வளர்ப்பும் நலனும்

புத்தகம் : குழந்தை வளர்ப்பும் நலனும் குழந்தைகள் வளர்ப்பு குறித்த புத்தகங்கள் தமிழில் வாசிக்க கிடைப்பது அரிது சில மேலைநாட்டு பிரபல எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்புப் புத்தகங்களை வாங்கிப் படித்தால் நீங்கள் இதுவரை படித்த கேட்ட தமிழை மறந்து விடும் அளவிற்கு இருக்கும் என்கின்ற சூழ்நிலையில் "குழந்தை வளர்ப்பும் நலனும்" என்கின்ற மருத்துவர் ப.வைத்தியலிங்கம் அவர்களின் இந்த நூல் மிகவும் முக்கியமானது. குழந்தை பெற்றுக்கொள்கிற அல்லது பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் தொடங்கி குழந்தைகளுக்கு வீட்டில் ஏற்படும் எதிர்பாராத விபத்துகள் வரை அனைத்தையும் அலசும் முப்பத்திமூன்று கட்டுரைகளின் தொகுப்பாக இந்த புத்தகம் விளங்குகிறது.  குழந்தை இந்த உலகத்தை அடைந்தவுடன் முதல் முதலில் அது சந்திக்கும் டெம்பரேச்சர் சாக் முதல் அதன் உடலின் மேல் பூசப்பட்டிருக்கும் வெள்ளை நிற வெர்னிக்ஸ் மாவு, Foremilk,Hindmilk தாய்பாலில் அடுத்தடுத்த மணிநேரங்களில் சுரக்கும் இருவகை பால் பற்றி பேசி, தாய்ப்பால் ஊட்டுவதில் தாய்மார்களுக்கு உள்ள பிரச்சனைகள், தாய்மார்களுக்கு எந்தெந...

கடைசி_மழைத்துளி

புத்தகம்: கடைசி மழைத்துளி ஆசிரியர்:அறிவுமதி மரக்கிளையில் குழந்தை  வரப்பில் பண்ணையார்  பயிரில் சிந்துகிறது பால்  ~~~| விடிந்துவிடு இரவே விழித்திருக்கிறான் கூர்க்கா ~~~ அகதி முகாம்  மலையில் வருகிறது  மண்வாசனை   ~~~ பெற்றெடுக்கிறாளா பிறக்கவே இல்லை  இன்னும் பெண் ~~~ வீட்டுக்குள் குரோட்டன்சுகள் தொட்டிக்குள் மீன்கள்  வானம் தொலைந்த நகரம் ~~~ கிளை கிடைக்காத சோகம் அமர்ந்தது புறா  கல்லறைச் சிலுவை ~~~ பசிக்கு தாய்ப்பால் அருந்துபவர்களாக இல்லாமல் தாயின் முலையையே அறுத்து உண்ணும் அளவிற்கு சுயநலமும் கொடூரமும் நிறைந்ததாக மாறிப்போன வாழ்வியலை போர்களை அரசியலை சாடும் விதமாகவும் இயற்கையை, மனிதத்தை கொண்டாடும் விதமாகவும் இந்த புத்தகம் அமைந்துள்ளது. இதற்கு முன்னுரை வழங்கியுள்ள வண்ணதாசன் அவர்களும் காசிஆனந்தன் அவர்களும் முன்னுரையையே ஒரு சிறு கவிதை தொகுப்பில் போல வித்தியாசமாக எழுதி இருக்கிறார்கள். இறுதியாகப் புத்தகல்தில் இணைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் பற்றிய அறிவுமதி அவர்களின் உரைநடை காலக்கடலில் கரைந்து போகாத உறைநிலைப்படுத்தப்பட்ட தமிழீழ மக்களின் துன்பியல் வரலாற்ற...

முட்டு வீடு

புத்தகம்: முட்டு வீடு ஆசிரியர்: தமிழச்சி தங்கபாண்டியன்  முட்டு வீடு என்பது புதிதாக குழந்தை பிறந்து 30நாள் நிறைவடையாத வீட்டைக் குறிக்கக் கூடியதுசொல் கிராமிய நடையில் அமைந்த எளிமையான வாழ்வியலைச் சித்தரிக்கும்  ஐந்து சிறுகதைகளை கொண்ட நூல். ஏதோ ஒரு கிராமத்து நபருடன் பேசிக்கொண்டே நடப்பதைப் போன்ற உணர்வை புத்தகம் முழுதும் உணரமுடிகிறது. பெண்ணின் மொழியில் கிராமத்து வாழ்வில் இருக்கும் பழமைவாத கருத்துக்களை எதிர்த்து கேள்வி எழுப்பும் விதமாக இருந்தாலும் எந்தவித ஆரவாரமும் அற்று வெகுஇயல்பாய் கதையின் போக்கு அவ்வாறு அமைந்திருப்பது சிறப்பு. உயிர்மெய் பதிப்பகம் விலை:₹60